தமிழ் இலக்கிய வழி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

Top posting users this month
No user


உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…

Go down

உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்… Empty உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…

Post by yarlpavanan Thu Apr 12, 2018 4:18 pm

உறவுகளே!
மருத்துவரும் நம்மைப் போலத் தான்…
மனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…
அவரிடம்
நமது உடலைக் காண்பிப்பதில்
ஏன் முகம் சுழிக்க வேண்டும்?

சொன்னால் நம்ப மாட்டியள்…
எனது ஆணுறுப்பில் புண் வந்துவிட்டது…
அருகிலுள்ள மருத்துவமனையில்
அழகான, இளமையான
பெண் மருத்துவர் தான் இருக்கின்றார்.
எனது ஆணுறுப்பை
பெண் மருத்துவரிடம் காட்டினால் – எனது
மதிப்புக் குறைந்துவிடும் என அஞ்சினால்
எனக்குச் சாவுதான் பரிசாகக் கிட்டியிருக்குமே!
ஆனால்,
எனது ஆணுறுப்பை – குறித்த
பெண் மருத்துவரிடம்
நான்கு முறைக்கு மேல் காட்டியிருப்பேன்!
ஏன்?
எனது ஆணுறுப்பில் வந்த புண்
மாறவேண்டும் என்பதற்காக…
இறுதியில் – எனது
ஆணுறுப்பில் வந்த புண் மாறிவிட்டது…
புண்ணுக்குக் காரணமே
நீரிழிவு நோய் தான்!
உடலில்
குளுக்கோசின் அளவு கூடியதால் – அது
சலத்துடன்(Urine) வெளியேறியதாம் – அவ்வாறு
சலத்துடன்(Urine) வெளியேறுவதால்
ஆணுறுப்பின் முன்மேற்றோலில் பாதிப்பு ஏற்பட
புண் தோன்றுவதாகக் கூறி
நீரிழிவைக் கட்டுப்படுத்தியதும்
புண் மாறியதாக – குறித்த
பெண் மருத்துவர் விளக்கமளித்தாரே!

பெண் மருத்துவரிடம்
எனது ஆணுறுப்பைக் காட்டினால்
என்னை மதிக்க மாட்டாரென
அஞ்சியிருந்தால் – இந்த
உண்மையை உங்களுக்குச் சொல்ல
நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேனே!
உறவுகளே
பால் நிலை வேறுபாட்டைக் கருதியோ
மதிப்புக் குறைந்து போய்விடும் என அஞ்சியோ
மருத்துவரிடம் நாடி உதவி பெறாவிடின்
எந்தக் கடவுள் வந்தாலும்
உங்களைக் காப்பாற்ற இயலாதே!
எடுத்துக் காட்டாக
அழகிய பெண்ணொருத்தி – தனது
மார்பகத்தில் (Breast) தோன்றிய
சிறு காயைக்/ கட்டியைக் கூட
ஆண் மருத்துவரிடம் காட்டினால்
தன் அழகுக்கு இழுக்கு வருமென அஞ்சி
தானாக மாறுமெனக் காலம் கடத்தினாளே!
காலப் போக்கில்
மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) வந்து
குறித்த அழகிய பெண் சாவடைந்தாளே!

இப்படித்தான்
அழகிய பெண்ணொருத்தி
தனது பெண்ணுறுப்புக்குக் கிட்ட
அடிக்கடி கையை நீட்டி சொறிந்ததை
திருமண நிகழ்வொன்றில் பார்த்தேன்…
“என்னம்மா? – இது
உங்களுக்கே சரியா?” என்று
கேட்ட போது தான் தெரிந்தது…
பெண்ணுறுப்பருகே
இருபக்கத்திலும் கடியாம்…
வேப்பிலை அரைத்துப் பூசியும்
குறையவில்லையாம் என்றாளே!
இதெல்லாம்
உடைகளால் ஏற்படும் தொற்றுத் தான்!
உடனடியாகவே
மருத்துவரிடம் காட்டுங்கள் என்றேன்…
மறுநாள் – அப்பெண்
என் வீட்டிற்கே வந்துவிட்டாளே!
குப்புசாமி மருத்துவரிடம் காட்டியதால்
“இலகுவில் பெண்ணுறுப்பில்
தொற்றுகள் ஏற்பட வாய்புண்டெனக் கூறி
உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்
தொற்றுகள் – பிற
நோய்களையும் ஏற்படுத்தும்” என்று கூறி
அவர் கொடுத்த மருந்தால்
தனக்கு நோய் குணமாயிற்று என்றாளே!
மருத்துவரை நாட வைத்த
எனக்கு நன்றி சொல்லவே
என் வீட்டிற்கு – தான்
வந்ததாகச் சொன்னாளே!

உறவுகளே!
மருத்துவரும் நம்மைப் போலத் தான்…
மனித உடலைச் சீர் செய்பவரும் அவரே…
அவரிடம்
நமது உடலைக் காண்பிப்பதில்
ஏன் முகம் சுழிக்க வேண்டும்?
அவரிடம்
எமது நோய் பற்றிய
உண்மைகளை எடுத்துக் கூறுவதால்
என்ன தான் மதிப்புக் குறையப் போகிறது?
உறவுகளே!
நோய்கள் அணுகாமல் உடலைப் பேணுங்கள்…
நோய்கள் அணுகினால்
உடனுக்குடன் மருத்துவரை அணுகி
சாவிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும்
நீண்ட ஆயுளுடன் வாழவும்
முயற்சி செய்யுங்களேன்!
yarlpavanan
yarlpavanan

Posts : 3
Join date : 08/04/2018
Age : 54
Location : Mathagal East, Jaffna, Sri Lanka

http://www.ypvnpubs.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum